ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோவில், திருஇடைமருதூர், திருவிடைமருதூர் (Thiruvidaimarudur)

India / Tamil Nadu / Tiruvidaimarudur / Thiruvidaimarudur
 சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN030 - ஸ்ரீப்ருஹத்சுந்தரகுஜாம்பாள் சமேத ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம் மத்யார்ச்சுனம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 30வது தலம்.தமிழில் ஸ்ரீபெருநல முலையம்மை உடனுறை ஸ்ரீமருதவாணர் திருக்கோவில்.TMMPT - திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கஸ்வாமி பரிவாரக் கோவில்களுள் முதன்மையான ஸ்ரீமகாலிங்கேசர் ஆலயம். TPuT - திருப்புகழ் திருத்தலம்.MukT - முக்தித்தலம், பட்டினத்தாரின் சீடர் ஸ்ரீபத்ரகிரி ஸ்வாமிகள், அவருடன் நாயும் முத்தி பெற்ற திருத்தலம்.SCPT - (ஸ்ரீஆதிசங்கரரால்) ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணப்பட்ட ஆலயம்.BStarT - அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கி நலம் பெற வேண்டிய திருக்கோவில், அது மட்டுமல்லாது அனைத்து நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் கூட இங்கு ஆடல்வல்லான் மண்டபத்தில் உள்ள 27நட்சத்திர லிங்கங்களை வணங்கி பேறு பெறலாம்.மேலும் சந்திரனுக்கு உரிய தலமாகவும் இது விளங்குகிறது.PT brammahathi - தோஷங்களில் பெரிய தோஷமான பிரம்மஹத்தி தோஷத்தையும் நிவர்த்தி செய்யும் சக்தி வாய்ந்த தலம்.
shaivam.org/siddhanta/sp/spt_p_idaimarudhur.htm
temple.dinamalar.com/New.php?id=396
location:மயிலாடுதுறை-கும்பகோணம் இரயில் பாதையில் உள்ள இரயில் நிலையம். மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.
இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூசை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூசை நடைபெறும்.இத்தல விநாயகர் அருள்மிகு மகாலிங்கப் பெருமானைப் பூசித்து பல உயிர்களும் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்து வந்தமையால் இவ்விநாயகப் பெருமான் அருள்மிகு ஆண்ட விநாயகர் என்னுந் திருநாமம் பூண்டு எழுந்தருளியுள்ளார்.சிவ பரிவார மூர்த்தத் தலங்கள் யாவும் அருகே அமையப்பெற்றதால் இது மகாலிங்கத்தலம் எனப்படுகிறது. அவையாவன: விநாயகர்- திருவலஞ்சுழி, முருகர்- சுவாமி மலை, நடராஜர்-சிதம்பரம், தட்சிணாமூர்த்தி-ஆலங்குடி, சண்டேச்சுரர்- திருசேய்ஞலூர், பைரவர்-சீர்காழி, நவக்கிரகம்-சூரியனார் கோவில்.இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும்.இத்தலத்தில் காருண்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம் என முப்பத்துரண்டு தீர்த்தங்கள் உள்ளன. இத்தலத்தில் உள்ள அசுவமேதத் திருச்சுற்றை வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறுவர்.கொடுமுடித் திருச்சுற்றை வலம் வருவோர் கயிலாய மலையை வலம் செய்த பலனை அடைவர்.பிரணவத் திருச்சுற்றில் இப்போதும் நாதோற்பத்தி விளங்கி வரும் சிறப்புடையது; இத்திருச்சுற்றை வலம் வருவோர் மெஞ்ஞானம் பெற்றுச் சிறப்பர். இத்தலப் பெருமானை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்தேவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், காளமேகப் புலவர் முதலானோர் பாடிப் பரவியுள்ளனர்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°59'43"N   79°27'10"E
  •  188 கி.மீ
  •  200 கி.மீ
  •  268 கி.மீ
  •  324 கி.மீ
  •  416 கி.மீ
  •  449 கி.மீ
  •  467 கி.மீ
  •  472 கி.மீ
  •  489 கி.மீ
  •  565 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 2 years ago