ஸ்ரீநறையூர்நம்பி திருக்கோயில், திருநரையூர்

India / Tamil Nadu / Tiruvidaimarudur /
 கோவில், திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

CNDD014, DD014 - ஸ்ரீவஞ்சுளவல்லித் தாயார் சமேத ஸ்ரீநரையூர்நம்பி ஆலயம்,திருநறையூர் எனும் ஸ்ரீநாச்சியார் திருக்கோயில்,சோழநாடு பகுதியில் உள்ள 14வது திவ்யதேசம். பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்களுள் ஒன்று.MukT -முக்தி தரும் 12 தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.AvrT /PT marriage - ஸ்ரீமேதாவி மகரிஷியின் மகளாக அவதரித்த தாயாரை திருமால் திருமணம் புரிந்து கொண்ட தலம். PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்,உற்சவர் தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் "சாவிக்கொத்து" வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதால் வணங்குவோர்க்கு அனைத்து வளமும் தருபவள்.PT chathru vinAsanam - எதிரிகள் அழிந்துபட வழிபட வேண்டிய கோயில்,ஸ்ரீசக்கரத்தாழ்வார், கீழே நவக்கிரகங்கள் மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டிருக்க அதன் மத்தியில் பிரயோக கோலத்தில் இருக்கும் இவரை வணங்க எதிரிகள் நீங்கி விடுவர்.PT Education/Knowledge - திருமங்கையாழ்வாருக்கு பெருமாளே ஆச்சார்யனாக வந்ததால்,கல்விகலைகளில் சிறக்க வணங்க வேண்டிய தலம். HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம், ஆழ்வாரை முத்ராதானம் செய்து ஸ்ரீவைணவராக ஏற்றுக் கொண்ட தலமாதலால் வைணவம் விளங்க வேண்டிக் கொள்ள வேண்டிய பதி. MuVT - கல்கருட மூலவரே உற்சவராகவும் திகழும் விசேஷம். KyWT - கலியுகத்திலும் அதிசயமான தலம், கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது முதலில் நான்கு பேர் கல்கருடரைச் சுமந்து வருவர். பின் அப்படியே 8,16,32 எனப்பெருகி இறுதியில் பலர் இவரைச் சுமக்கிறார்கள். இவர் வெளியிலிருந்து மீண்டும் கருவறை நோக்கி வரும்போது அதே எண்ணிக்கையில் ஆட்கள் குறைந்து பின் கருவறையில் 4 பேர் மட்டுமாக வைக்கின்றனர்.MdKT - ஸ்ரீகோச்செங்கனான் கட்டிய வைணவ மாடக் கோவில்.PT nAga dhosham - ஜாதகத்தில் நாகதோஷம் நீக்கக் கூடிய சக்தி வாய்ந்த தலங்களுள் ஒன்று, உடலில் நவநாகங்கள் சுற்றியபடி இருக்கும் ஸ்ரீகருடாழ்வாருக்கு மோதக நிவேதனம் செய்து ராகு,கேது தோஷ பரிகாரம் செய்து கொள்ளலாம்.
ஸ்ரீனிவாச விமானம்: மணிமுத்தா,அநிருத்த,பிரத்யும்ன,சங்கர்ஷண தீர்த்தங்கள்
www.trsiyengar.com/id176.shtml
temple.dinamalar.com/New.php?id=375
அமைவிடம்:கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருவாரூர் செல்லும் வழியில் கோயில் இருக்கிறது.திருநாரையூர் எனும் நாரை வணங்கி முக்தி பெற்ற தேவாரத் தலம் வேறு,காட்டுமன்னார் கோயில் அருகே உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°54'57"N   79°26'42"E
  •  179 கி.மீ
  •  193 கி.மீ
  •  261 கி.மீ
  •  318 கி.மீ
  •  407 கி.மீ
  •  440 கி.மீ
  •  459 கி.மீ
  •  463 கி.மீ
  •  480 கி.மீ
  •  557 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago