Ayyarappar sivan temple (மயிலாடுதுறை)
India /
Tamil Nadu /
Mayiladuthurai /
மயிலாடுதுறை /
Thiruvarur road, 11
World
/ India
/ Tamil Nadu
/ Mayiladuthurai
Bota / இந்தியா / தமிழ்நாடு / நாகப்பட்டினம்
கோவில், சிவன் கோயில்
நாகை மாவட்டம், மயிலாடுதுறை ஐயாறப்பர் திருக்கோயில்.
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஐயாறப்பர் ஆலயம்.
திருவையாறில் எழுந்தருளியிருக்கும் இறைவன் ஐயாறப்பரும், இறைவி அறம்வளர்த்த நாயகியும், அதே பெயர்களில் இங்கும் எழுந்தருளியிருக்கின்றனர்.
தஞ்சாவூர் அருகே உள்ளது சக்கரப்பள்ளி. அங்கே நாதசன்மா என்ற சிவபக்தர் வசித்து வந்தார். அவருடைய மனைவி அநவித்யை. அவளும் ஒரு சிறந்த சிவபக்தையாக திகழ்ந்தாள். இருவரும் தினசரி மூன்று வேளையும் திருவையாறில் அருள்பாலிக்கும் இறைவன் ஐயாறப்பரையும், அன்னை அறம் வளர்த்த நாயகியையும் பூஜை செய்துவந்தனர். ஐப்பசி மாத கடைசி நாளன்று மாயூரத்தில் (தற்போதைய மயிலாடுதுறை) நடைபெறும் விழா கடைமுழுக்கு. அன்று அங்குள்ள அனைத்து ஆலய மூர்த்திகளும் உலாவந்து, மாயூரநாதர்-அபயாம்பிகையோடு காவிரியில் தீர்த்தம் கொடுப்பது வழக்கம். துலா மாதமாகிய ஐப்பசியில் அறுபத்தாறு கோடி நதிகளும் காவிரியில் கலப்பதாக ஐதீகம். அதனால் இங்கு நீராடுவதால் பல தலைமுறைகளாக நாம் செய்த பாவம் கரைந்து போகும் என்பது அனைவரின் நம்பிக்கை.
நாதசன்மா-அநவித்யை தம்பதிக்கு இந்த ‘கடைமுழுக்கு‘விழாவில் கலந்து கொண்டு, துலா கட்டத்தில் நீராடுவது நீண்டநாள் ஆசை. உடனே காலை பூஜைகளை திருவையாறில் முடித்துவிட்டு இரவு திரும்பிவிடும் எண்ணத்தோடு மாயூரம் புறப்பட்டனர். ஆனால், இரவு நேரம் நெருங்கிவிட்டது. நினைத்தபடி ஐப்பசி கடைசி நாளில் பகலில் காவிரியில் நீராட முடியவில்லையே என வேதனைப்பட்டனர்.
இரவு நேரம் ஆகிவிட்டதால், அவர்களால் உடனடியாக திருவையாறுக்கு திரும்பி ஐயாறப்பரையும் தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் அவர்கள் பெரும் கவலையடைந்தனர். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது: ‘கவலை வேண்டாம். பொழுது விடிவதற்குள் காவிரியில் போய் நீராடுங்கள். உங்களுக்கு ஐப்பசியில் நீராடிய அனைத்து புண்ணியங்களும் கிடைக்கும். தவிர திருவையாற்றுக்கு திரும்ப முடியவில்லையே என வருந்த வேண்டாம். மாயூரநாதர் ஆலயத்திற்கு மேற்கில் உள்ள ஆலயத்தில் யாம் எழுந்தருளியுள்ளோம்.
அங்கு வந்து எம்மைத் தரிசித்துச் செல்லுங்கள்.’ அதன்படி இருவரும் மறுநாள் விடியற்காலையில் காவிரியில் நீராடி விட்டு, ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டனர். தன்னை வணங்கிய இருவரையும் தன்னுள் ஐக்கியமாகும்படி இறைவன் பணிக்க, அப்படியே நாதசன்மாவும், அநவித்யையும் சிவபெருமானுடன் ஐக்கியமாயினர். நாதசன்மா ஐக்கியமான சிவலிங்கம், மாயூரநாத சுவாமி ஆலயத்தில் கணக்கடி விநாயகர் சந்நதிக்கு அருகே தனிச் சந்நதியில் அமைந்துள்ளது. அநவித்யை ஐக்கியமான சிவலிங்கம் மாயூரநாதர் ஆலயத்தில் உள்ள அன்னை அபயாம்பிகை சந்நதிக்கு தென்புறத்தில் இருக்கிறது. அநவித்தை ஐக்கியமான சிவலிங்கத்திற்கு வழக்கமான ஆடை அலங்காரங்கள் கிடையாது. மாறாக சிவலிங்கத்திற்கு இங்கு சேலையையே அணிவிக்கின்றனர். இது எந்த சிவாலயத்திலும் காண முடியாத சிறப்பு அம்சமாகும்.
இந்த ஐயாறப்பர் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்று நிலை முதன்மை கோபுரம் உள்ளது
உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் திருக்குளமும், அதனருகே படித்துறை விநாயகர் ஆலயமும் உள்ளன. ராஜகோபுரத்திதினை கடந்ததும் விசாலமான பிராகாரத்தில் பலிபீடம், நந்தியம் பெருமான், கொடிமரம் ஆகியவை உள்ளன.மேற்கு பிராகாரத்தில் விநாயகர், தென் கயிலைநாதர், வடகயிலை நாதர், வள்ளி-தெய்வானை சமேத முருகன், மகாவிஷ்ணு, கஜலட்சுமி சந்நதிகள் உள்ளன.
மகா மண்டபத்தில் கருங்கல் நடராஜர் சிவகாமி உள்ளனர். மண்டப சுவர்கள் முழுவதும் கல்வெட்டுக்கள் நிறைந்துள்ளன.
பின் புறம் கருவறை கோட்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். இவரை வணங்குவோருக்கு திருமண தடை நீங்குகிறது. தென்புறம் தென்முககடவுள் அழகிய வடிவுடன் உள்ளார், அடுத்த கோட்டத்தில்விநாயகர் உள்ளார். தென்புறத்தில் அறுபத்து மூவர் சிலைகள் வரிசை கட்டி நிற்க அதன் கடைசியில் சரஸ்வதி உள்ளார்.
கோயில் தற்போது தான் குடமுழுக்கு கண்டுள்ளது
இறைவன்- ஐயாறப்பர்
இறைவி- அறம் வளர்த்த நாயகி
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஐயாறப்பர் ஆலயம்.
திருவையாறில் எழுந்தருளியிருக்கும் இறைவன் ஐயாறப்பரும், இறைவி அறம்வளர்த்த நாயகியும், அதே பெயர்களில் இங்கும் எழுந்தருளியிருக்கின்றனர்.
தஞ்சாவூர் அருகே உள்ளது சக்கரப்பள்ளி. அங்கே நாதசன்மா என்ற சிவபக்தர் வசித்து வந்தார். அவருடைய மனைவி அநவித்யை. அவளும் ஒரு சிறந்த சிவபக்தையாக திகழ்ந்தாள். இருவரும் தினசரி மூன்று வேளையும் திருவையாறில் அருள்பாலிக்கும் இறைவன் ஐயாறப்பரையும், அன்னை அறம் வளர்த்த நாயகியையும் பூஜை செய்துவந்தனர். ஐப்பசி மாத கடைசி நாளன்று மாயூரத்தில் (தற்போதைய மயிலாடுதுறை) நடைபெறும் விழா கடைமுழுக்கு. அன்று அங்குள்ள அனைத்து ஆலய மூர்த்திகளும் உலாவந்து, மாயூரநாதர்-அபயாம்பிகையோடு காவிரியில் தீர்த்தம் கொடுப்பது வழக்கம். துலா மாதமாகிய ஐப்பசியில் அறுபத்தாறு கோடி நதிகளும் காவிரியில் கலப்பதாக ஐதீகம். அதனால் இங்கு நீராடுவதால் பல தலைமுறைகளாக நாம் செய்த பாவம் கரைந்து போகும் என்பது அனைவரின் நம்பிக்கை.
நாதசன்மா-அநவித்யை தம்பதிக்கு இந்த ‘கடைமுழுக்கு‘விழாவில் கலந்து கொண்டு, துலா கட்டத்தில் நீராடுவது நீண்டநாள் ஆசை. உடனே காலை பூஜைகளை திருவையாறில் முடித்துவிட்டு இரவு திரும்பிவிடும் எண்ணத்தோடு மாயூரம் புறப்பட்டனர். ஆனால், இரவு நேரம் நெருங்கிவிட்டது. நினைத்தபடி ஐப்பசி கடைசி நாளில் பகலில் காவிரியில் நீராட முடியவில்லையே என வேதனைப்பட்டனர்.
இரவு நேரம் ஆகிவிட்டதால், அவர்களால் உடனடியாக திருவையாறுக்கு திரும்பி ஐயாறப்பரையும் தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் அவர்கள் பெரும் கவலையடைந்தனர். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது: ‘கவலை வேண்டாம். பொழுது விடிவதற்குள் காவிரியில் போய் நீராடுங்கள். உங்களுக்கு ஐப்பசியில் நீராடிய அனைத்து புண்ணியங்களும் கிடைக்கும். தவிர திருவையாற்றுக்கு திரும்ப முடியவில்லையே என வருந்த வேண்டாம். மாயூரநாதர் ஆலயத்திற்கு மேற்கில் உள்ள ஆலயத்தில் யாம் எழுந்தருளியுள்ளோம்.
அங்கு வந்து எம்மைத் தரிசித்துச் செல்லுங்கள்.’ அதன்படி இருவரும் மறுநாள் விடியற்காலையில் காவிரியில் நீராடி விட்டு, ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டனர். தன்னை வணங்கிய இருவரையும் தன்னுள் ஐக்கியமாகும்படி இறைவன் பணிக்க, அப்படியே நாதசன்மாவும், அநவித்யையும் சிவபெருமானுடன் ஐக்கியமாயினர். நாதசன்மா ஐக்கியமான சிவலிங்கம், மாயூரநாத சுவாமி ஆலயத்தில் கணக்கடி விநாயகர் சந்நதிக்கு அருகே தனிச் சந்நதியில் அமைந்துள்ளது. அநவித்யை ஐக்கியமான சிவலிங்கம் மாயூரநாதர் ஆலயத்தில் உள்ள அன்னை அபயாம்பிகை சந்நதிக்கு தென்புறத்தில் இருக்கிறது. அநவித்தை ஐக்கியமான சிவலிங்கத்திற்கு வழக்கமான ஆடை அலங்காரங்கள் கிடையாது. மாறாக சிவலிங்கத்திற்கு இங்கு சேலையையே அணிவிக்கின்றனர். இது எந்த சிவாலயத்திலும் காண முடியாத சிறப்பு அம்சமாகும்.
இந்த ஐயாறப்பர் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்று நிலை முதன்மை கோபுரம் உள்ளது
உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் திருக்குளமும், அதனருகே படித்துறை விநாயகர் ஆலயமும் உள்ளன. ராஜகோபுரத்திதினை கடந்ததும் விசாலமான பிராகாரத்தில் பலிபீடம், நந்தியம் பெருமான், கொடிமரம் ஆகியவை உள்ளன.மேற்கு பிராகாரத்தில் விநாயகர், தென் கயிலைநாதர், வடகயிலை நாதர், வள்ளி-தெய்வானை சமேத முருகன், மகாவிஷ்ணு, கஜலட்சுமி சந்நதிகள் உள்ளன.
மகா மண்டபத்தில் கருங்கல் நடராஜர் சிவகாமி உள்ளனர். மண்டப சுவர்கள் முழுவதும் கல்வெட்டுக்கள் நிறைந்துள்ளன.
பின் புறம் கருவறை கோட்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். இவரை வணங்குவோருக்கு திருமண தடை நீங்குகிறது. தென்புறம் தென்முககடவுள் அழகிய வடிவுடன் உள்ளார், அடுத்த கோட்டத்தில்விநாயகர் உள்ளார். தென்புறத்தில் அறுபத்து மூவர் சிலைகள் வரிசை கட்டி நிற்க அதன் கடைசியில் சரஸ்வதி உள்ளார்.
கோயில் தற்போது தான் குடமுழுக்கு கண்டுள்ளது
இறைவன்- ஐயாறப்பர்
இறைவி- அறம் வளர்த்த நாயகி
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 11°5'42"N 79°39'6"E
- ஸ்ரீஆதிமயூரநாதர் திருக்கோவில், மயிலாடுதுறை, மாயவரம் 0.3 கி.மீ
- திருஇந்தளூர் பரிமளரங்கநாதப்பெருமாள் கோவில் (மயிலாடுதுறை) 1.8 கி.மீ
- ஸ்ரீஆனந்த தாண்டவரேஸ்வரர் ஆலயம், ஆனதாண்டவபுரம், 5.6 கி.மீ
- ஸ்ரீவீரட்டேஸ்வரர் திருக்கோவில்,வழுவூர் 5.8 கி.மீ
- ஸ்ரீமகாலக்ஷ்மீசர் திருக்கோவில், திருநின்றியூர் 7.8 கி.மீ
- ஸ்ரீவீரட்டேஸ்வரர் ஆலயம். திருப்பறியலூர், கீழப்பரசலூர், 8 கி.மீ
- ஸ்ரீநற்றுணையப்பர் திருக்கோயில், புஞ்சை, திருநனிப்பள்ளி, 12 கி.மீ
- ஸ்ரீதான்தோன்றிநாதர் திருக்கோவில், திருஆக்கூர், ஆக்கூர் 14 கி.மீ
- Sri Thanthondri Vinayagar Temple 14 கி.மீ
- ஸ்ரீசங்காரண்யேஸ்வரர் திருக்கோவில், திருத்தலைச்சங்காடு, 16 கி.மீ
- ஒரிங்கிணைகப்பட்ட நீதிமன்ற வளாகம் 0.3 கி.மீ
- G.G.S.M.M.Hr.sec.school playground 0.9 கி.மீ
- a.v.c 1.2 கி.மீ
- oda kulam 1.3 கி.மீ
- RAJESH HOUSE (Renga Villas) PKR Family house 1.3 கி.மீ
- SENTHAMARAI ILLAM 1.6 கி.மீ
- Madhu Veedu 1.7 கி.மீ
- HAJIYAR NAGAR 2.1 கி.மீ
- சாந்துகாப்பு அப்பாசாவடி குளம் 2.2 கி.மீ
- மாப்படுகை பகுதி 3.3 கி.மீ