TNDD063, DDO63 அருள்மிகு தலசயன or ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், திருக்கடல் மல்லை, (மகாபலிபுரம் / மாமல்லபுரம்)

India / Tamil Nadu / Mamallapuram / மகாபலிபுரம் / மாமல்லபுரம்
 திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்

sthalasayanap perumAL temple - Thirukkadal mallai, thirukkadal mallai, mAmallapuram, mahabalipuram, divya dEsam 63,

மகாபலிபுரம் சுற்றுலா செல்லும் அன்பர்கள் அர்ஜுன தபஸ் அருகிலேயே இருக்கும் இந்தத் திருக் கோவிலுக்குச் செல்லுங்கள்! "சொந்த வீடு" வாங்குவதற்கு அருள்புரியும் நிலமடந்தைத் தாயாரும், ஸ்தல சயனப் பெருமாளும் இங்கே நம்மை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்! ¶

மூலவர் : ஸ்தலசயனப்பெருமாள்
உற்சவர் : உலகுய்ய நின்றான்
அம்மன்/தாயார் : நிலமங்கைத் தாயார்
தல விருட்சம் : புன்னை மரம்
தீர்த்தம் : புண்டரீக புஷ்கரணி
விமானம் : கனகாகிருதி விமானம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கடல் மல்லை
ஊர் : மகாபலிபுரம்

பாராய துண்டு மிழ்ந்த பவளத் தூனை படுகடலில் அமுதத்தைப் பர்வாய்க்கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புனர் மருதமிற நடந்த பொற்குன்றினை
காரானை யிடர் கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே -
திருமங்கையாழ்வார்!

புண்டரீக மகரிஷிக்காக கடல் நீர் வற்றிய கட்டாந்தரையில் படுத்துக் கொண்ட பரமன் என்பதால் ஸ்தலசயனப் பெருமாள் (எங்கும் காணப்படும் பாம்பு படுக்கை -சேஷ சயனம்! இங்கு இல்லை ) என்றும் தாயார் நிலமங்கைத் தாயார் எனவும் அழைக்கப் படுகிறார்கள் திருமணத்தடை நீங்க, வீடு, மனை, nilam வாங்க, விற்க வாஸ்து தோஷம் நீங்க வழிபட வேண்டிய திருத் தலம்! பூதத்தாழ்வார் அவதார தலம்! 108 திருப்பதியில் கையில் தாமரை மொட்டுடன் நிற்கும் உற்சவர் இவர் மட்டும் தான். தன் கையில் உள்ள தாமரையை மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம்.

ஒரு காலத்தில் இங்கு ஏழு கோயில்கள் இருந்தன. அப்போது இத்தலத்திற்கு "ஏழு கோயில் நகரம்' என்ற பெயர் இருந்தது. இவை கடல் சீற்றத்தினால் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டன. அதன் பின் பல்லவ மன்னன் ராஜசிம்மன் 3 கோயில் கட்டினான். அதில் இரண்டு கடல் சீற்றத்தால் அழிக்கப்பட்டு விட்டன. மிஞ்சிய ஒன்று தான் தற்போதுள்ள கோயில். இதுவும் கடல் அலைகளால் தாக்கப்பட்டு வருகிறது.இதை மனதில் கொண்டோ என்னவோ, 14ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குசன் மாமல்லபுரம் நகருக்குள் ஆகமவிதிப்படி கோயில் கட்டி, இங்கிருந்த பெருமாளை பிரதிஷ்டை செய்தார். இவருக்கே தற்போது வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இத்தல பெருமாளை தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்டநாதனை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

for more details :temple.dinamalar.com/New.php?id=649

Location:சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மகாபலிபுரத்தில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°37'2"N   80°11'34"E
  •  71 கி.மீ
  •  420 கி.மீ
  •  531 கி.மீ
  •  614 கி.மீ
  •  659 கி.மீ
  •  668 கி.மீ
  •  696 கி.மீ
  •  968 கி.மீ
  •  971 கி.மீ
  •  1050 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 13 years ago