Mukasaparur sivan temple (Mukhasaparur)
India /
Tamil Nadu /
Virudhachalam /
Mukhasaparur /
Vridhachalam road
World
/ India
/ Tamil Nadu
/ Virudhachalam
temple, Shiva temple
இருநூறாண்டுகளின் முன் கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலம் அடுத்த பரூர்பாளையம் தான் இந்த மாவட்டத்தில் பெரிய ஊர். பரூர் பாளையத்தின் தலைமை இடம்தான் பரூர். பாளையக்காரர்களின் நிர்வாகத்திலும்,மணிமுத்தாற்றின் வளத்திலும் அந்தப் பகுதி பொலிவுடன் திகழ்ந்தன.
ஒருநாள் திடீரென தலைகீழாய் மாறிப்போனது. முகாசா என்னும் இஸ்லாமிய படையெடுப்பாளனின் வருகை அந்தப் பகுதியின் முகத்தை மாற்றி விட்டது. ஆலயங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. மங்கலம் பேட்டை மங்கலநாயகி அம்மன் கோயில், பரூர் வரதராஜர் கோயில் என தாக்குதலுக்கு உள்ளான கோயில்கள் ஏராளம். அதிலொன்று அன்னபூரணி உடனுறை விஸ்வநாதேஸ்வரர் திருக்கோயில்.
சுமார் 800 வருடம் பழமை வாய்ந்த இந்தக் கோயில் அமைந்துள்ள. பரூர் பாளையம் இன்று முகாசாபரூர் என்று அழைக்கப்படுகிறது. ஆம்! ஆக்கிரமிப்பாளனின் பெயரை தன்னோடு இணைத்துக் கொண்டுவிட்டது.
பழமையான கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது அதனால் அந்த பழமையின் அழகு கேட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும்.முகப்பில் பெரிய கருங்கல் நந்தி மண்டபம் அடுத்து பலிபீடம் ஒன்று மட்டும் மழமை மாறாமல் உள்ளன.
சிறிய நுழைவாயில் வழியாக உள்ளே சென்றதும்,மிகப்பெரிய நந்தி.பெரியதொரு மண்டபத்தில் உள்ளது.
இறைவன் விஸ்வநாதராய் அருள்பாலிக்கிறார். கோரக்க சித்தர் போற்றி வணங்கிய ஈசன் இவர். இவரது அருளோடு இந்த ஆலய பிராகாரத்தில் சித்தியாகியுள்ளார் கோரக்கர். இந்த பரூர் சிவனை பற்றியும், அன்னை அன்னபூரணி குறித்தும் தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார், சித்தர்.SrPT- சிவராத்திரியன்று சூரியன் தன் பொன்கிரணங்களால் இந்த ஈசனை வழிபடுகிறான்.
பிராகார வலம் வரும்போது,, கோட்டத்து விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகியோரின்சிலைகள் உள்ளன.
JST - ஆலய வளாகத்தில் தனி மண்டபத்தில் கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி உள்ளது. இந்த இடத்தில் தெய்வீக அதிர்வுகளை உணரமுடிகிறது. பௌர்ணமி நாளில் இவர் சமாதி அருகே அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டால் எண்ணியது நடந்தேறும் என்பது பலரது அனுபவ நம்பிக்கை.
சித்தரின் சமாதியை தரிசனம் செய்துவிட்டு பின்புறம் உள்ளது கன்னி மூலைவிநாயகர் சன்னதி ,அருகில் வள்ளி-தெய்வானை சமேத முருகனும் தனி சன்னதியில் அமர்ந்துள்ளார்.
இறைவன் அருகிலேயே இடது புறம் கிழக்கு நோக்கியபடி அன்னை அன்னபூரணிக்கு தனி ஆலயம்.. இறைவியின் எதிரே அழகிய நந்தி உள்ளது. சண்டேசர் சன்னதியின் பக்க சுவற்றில் கோரக்கர் சிவனை பூசை செய்யும் புடைப்பு சிற்பம் உள்ளது.
புதிதாய் செய்து வைக்கப்பட்ட பைரவர், சூரிய சந்திரன் சிலைகள் மற்றும் நவகிரகங்களும் உள்ளன.
ஒருநாள் திடீரென தலைகீழாய் மாறிப்போனது. முகாசா என்னும் இஸ்லாமிய படையெடுப்பாளனின் வருகை அந்தப் பகுதியின் முகத்தை மாற்றி விட்டது. ஆலயங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. மங்கலம் பேட்டை மங்கலநாயகி அம்மன் கோயில், பரூர் வரதராஜர் கோயில் என தாக்குதலுக்கு உள்ளான கோயில்கள் ஏராளம். அதிலொன்று அன்னபூரணி உடனுறை விஸ்வநாதேஸ்வரர் திருக்கோயில்.
சுமார் 800 வருடம் பழமை வாய்ந்த இந்தக் கோயில் அமைந்துள்ள. பரூர் பாளையம் இன்று முகாசாபரூர் என்று அழைக்கப்படுகிறது. ஆம்! ஆக்கிரமிப்பாளனின் பெயரை தன்னோடு இணைத்துக் கொண்டுவிட்டது.
பழமையான கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது அதனால் அந்த பழமையின் அழகு கேட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும்.முகப்பில் பெரிய கருங்கல் நந்தி மண்டபம் அடுத்து பலிபீடம் ஒன்று மட்டும் மழமை மாறாமல் உள்ளன.
சிறிய நுழைவாயில் வழியாக உள்ளே சென்றதும்,மிகப்பெரிய நந்தி.பெரியதொரு மண்டபத்தில் உள்ளது.
இறைவன் விஸ்வநாதராய் அருள்பாலிக்கிறார். கோரக்க சித்தர் போற்றி வணங்கிய ஈசன் இவர். இவரது அருளோடு இந்த ஆலய பிராகாரத்தில் சித்தியாகியுள்ளார் கோரக்கர். இந்த பரூர் சிவனை பற்றியும், அன்னை அன்னபூரணி குறித்தும் தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார், சித்தர்.SrPT- சிவராத்திரியன்று சூரியன் தன் பொன்கிரணங்களால் இந்த ஈசனை வழிபடுகிறான்.
பிராகார வலம் வரும்போது,, கோட்டத்து விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகியோரின்சிலைகள் உள்ளன.
JST - ஆலய வளாகத்தில் தனி மண்டபத்தில் கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி உள்ளது. இந்த இடத்தில் தெய்வீக அதிர்வுகளை உணரமுடிகிறது. பௌர்ணமி நாளில் இவர் சமாதி அருகே அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டால் எண்ணியது நடந்தேறும் என்பது பலரது அனுபவ நம்பிக்கை.
சித்தரின் சமாதியை தரிசனம் செய்துவிட்டு பின்புறம் உள்ளது கன்னி மூலைவிநாயகர் சன்னதி ,அருகில் வள்ளி-தெய்வானை சமேத முருகனும் தனி சன்னதியில் அமர்ந்துள்ளார்.
இறைவன் அருகிலேயே இடது புறம் கிழக்கு நோக்கியபடி அன்னை அன்னபூரணிக்கு தனி ஆலயம்.. இறைவியின் எதிரே அழகிய நந்தி உள்ளது. சண்டேசர் சன்னதியின் பக்க சுவற்றில் கோரக்கர் சிவனை பூசை செய்யும் புடைப்பு சிற்பம் உள்ளது.
புதிதாய் செய்து வைக்கப்பட்ட பைரவர், சூரிய சந்திரன் சிலைகள் மற்றும் நவகிரகங்களும் உள்ளன.
Nearby cities:
Coordinates: 11°34'36"N 79°15'24"E
- Erappavur sivan temple 13 km
- Pushpagiri Malaiyandavar temple 42 km
- Thirukovilur 44 km
- Chidambaram 48 km
- Shri Natarajar Temple, Chithambaram ,Thillai 51 km
- Sirkazhi 62 km
- sree brahmapureeswarar Temple, Seerkaazhi 64 km
- Sri Vaidyanatha Swami Temple, Vaitheeswaran Koil 65 km
- Thiru Parvathamalai Temple 101 km
- Kalkulam 133 km
- M.AGARAM LAKE 5.7 km
- vilangattur and padukalanatham 6.7 km
- Singapore City - Residential Plots by Lucky Group 9 km
- SRI Ramakrishna Vidyalaya Gurukulam, Ulundurpet 10 km
- Pasumpon Nagar 11 km
- N.NARAIYUR 11 km
- Koothakudi Forest 14 km
- Koothakudi Lake 15 km
- sirunagalur 16 km
- Syed Kamil Hussain. Vilakkur 18 km