Perumakanallur sivan temple

India / Tamil Nadu / Ayyampettai / Thirukarugavur road
 Shiva temple  Add category
 Upload a photo

தஞ்சை- கும்பகோணம் சாலையில் உள்ள நெடார் ஆற்றின் வடக்கு கரையில் முருக்கன்குடி- வையச்சேரி- பெருமாக்கநல்லூர் என வரவேண்டும்.

முற்றிலும் சேதமாகி இருந்த கோயிலை ஊர் மக்கள் சேர்ந்து இந்த கோயிலை குடமுழுக்கு செய்துள்ளனர்.

இது பிரம்மன் வழிபட்டு பாவம் போக்கிக்கொண்ட தலம்.

நம்மில் எவரேனும் பெற்றோர்களை அவர்களது வயதான காலத்தில் கவனிக்காமல் கைவிட்டிருக்கலாம்;அல்லது அதற்குரிய சூழ்நிலை உருவாகியிருக்கலாம்;

இவைகள் தீர உங்கள் பிறந்த தமிழ்மாதத்தில்,பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் குரு ஓரையில் பின்வரும் பிரம்மா கோவில்களுக்குச் செல்ல வேண்டும்;

அப்படி செல்ல இயலாத பட்சத்தில்,வரும் ஆடி மாத பவுர்ணமி அல்லது ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் திரு ஓணம் நட்சத்திர நாள் அல்லது அவிட்டம் நட்சத்திர நாள் அல்லது பிரதமை திதி வரும் நாள் அல்லது பிரதமைதிதியும் அவிட்டம் நட்சத்திரமும்;திருவோணமும் பிரதமைதிதியும் வரும் நாள் அன்று சென்று பின்வரும் ப்ரம்மாவின் மந்திரத்தை ஒரு மணி நேரம் இக்கோயிலில் ஜபிக்க வேண்டும்;

1. திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

2.காஞ்சிபுரம் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

3. பெருமாக்க நல்லூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

4. புரசக்குடி அருட்பெரும் ப்ரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

இந்த ஆலயங்களில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நாட்களில் குரு ஓரையில் அல்லது குளிகை காலத்தில் பின்வரும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோஹ் ப்ரம்ம ப்ரசோதயாத்

அதன் பிறகு,அந்த ஆலயத்திற்கு வேண்டிய பூஜைபொருட்களை வாங்கித் தரலாம்

இப்போது நாம் காணும் பெருமாக்க நல்லூர் சிவாலயம் சிறிய கோயில் தான். எனினும் சிறப்பு மிக்கது. இறைவன் பிரம்மபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியும், இறைவி பிரகன்னாயகி தெற்கு நோக்கியும் அருள் தருகின்றனர். கருவறை கோட்டத்தில் தென்முகன் புதிய சிலை ஒன்று கோட்டத்திலும், பழமையான சிலை தனியாகவும் உள்ளன. வேறு கோட்ட தெய்வங்கள் இல்லை, விநாயகர் முருகனுக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன. சண்டேசர் சன்னதி உள்ளது.

பாபநாசம் அருகே பெருமாக்க நல்லூரில் பழங்கால சிற்பங்கள் 2015 ல் கண்டெடுக்கப்பட்டது.
தொல்லியல் வல்லுநர் குடவாயிற் சுந்தரவேலு, ஜெயபாலன் ஆகியோர் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட போது சிற்பங்கள் கண்டெடுக்கப் பட்டது. இது குறித்து சுந்தரவேலு கூறுகையில்: பெருமாக்க நல்லூர் திரௌபதி அம்மன் ஆலயத்தின் கீழ்ப்புற சுவரில் பதித்து வைக்கப் பட்டுள்ள நிலையில் 3 சிற்பங்கள் உள்ளது. இவற்றுள் 2 சிற்பங்கள் கி.பி 800ம் காலத்தையது. வேலவர் சிற்பம் கி.பி 12, 13 ம் நூற்றாண்டிற்கு உரியது. இதில் திருமால் சிற்பம் சுமார் 4 அடி உயரமுடையது. தாமரை பீடத்தின் மீது நின்ற நிலையில் அபயமளித்து சேவை சாதிக்கிறார். காதுகளை மகர குண்டலங்களும், கழுத்தை கண்டாபரணமும், கைகளை காப்புகளும் அலங்கரிக்கிறது. பட்டு பீதாம்பரமும், உத்தரீயமும், பல மடிப்புகளுடனும் கீழ்ப் பாய்ச்சுக் கட்டுடனும் செவ்வனே செய்விக்கப்பட்டுள்ளார். முருக வேளின் சிற்பம் 3 அடி உயரமுள்ளது. சமச் சீர் நிலையின் நின்று அருளும் முத்திரைக் காட்டும் நிலையில் உள்ளது. ஒரே கூரான கரண்ட மகுடமும், தடித்த கண்ணி மாலையும் தலையை அலங்கரிக்கின்றன. காதுகளை பத்ர குண்டலங்களும், கழுத்தை சரப் பளியும், மார்பை சன்ன வீரமும் அழகுச் செய்கின்றன. இரு பாதங்களும் சேதமடைந்துள்ளது. கடின வகை மணற் கல்லில் செய்விக்கப் பட்டுள்ள இவ் விரு தெய்வங்களின் பின்னிரு கரங்களும் தற்போது காணப்படவில்லை என்றார்
Nearby cities:
Coordinates:   10°51'36"N   79°12'20"E
This article was last modified 8 years ago