Paruthiyur Shiva Temple

India / Tamil Nadu / Kodavasal /
 temple, Shiva temple

நாச்சியார்கோயில் -ஸ்ரீவாஞ்சியம் சாலையில் செருகளத்தூர் தாண்டி வடக்குநோக்கி திரும்பினால் பருத்தியூர் அடையலாம். கிழக்கு நோக்கிய சிவன்கோயில் பள்ளி, சத்துணவு கூடங்கள் கோயில் இடத்தினை ஆக்கிரமித்தது போக தென் வாயில் மட்டும் தெரிகிறது. கிழக்கில் பெரிய குளம் ஒன்றுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசலுக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது பருத்தியூர். அதே மாவட்டத்தில் பருத்தியூர் என்ற பெயரில் மூன்று கிராமங்கள் உள்ளன. எனவே, எளிதில் வேறுபடுத்தி அறிய இந்தப் பருத்தியூரை, அருகில் இருக்கும் கிராமத்தின் பெயருடன் சேர்த்து, 'ஆவணம் பருத்தியூர்' என்று குறிப்பிடுகின்றனர்.

கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்து (எண்.39) பருத்தியூர் வழியாகச் செல்கிறது. நன்னிலம், திருவாரூர், குடவாசல், மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன. ‘பரிதி’ என்றால் சூரியன். சூரியன் சிவபெரு மானை வழிபட்ட இத்தலத்தை, பரிதியூர் என்று அழைத்தனர். அதுவே, தற்காலத்தில் பருத்தியூர் என்று வழங்கி வருகிறது.

சூரியன் எதற்காக, எப்போது ஈசனை வழிபட்டான்? ஒருமுறை கிரகண நாளில் சூரியனைப் பிடிக்க ராகு, தன் வாயைத் திறந்து கொண்டு சென்றான். தகித்துக் கொண்டிருந்த சூரியனின் கதிர்களைக் கண்டவுடன் ராகுவிற்குக் கடுங்கோபம் வந்தது.

பாம்பு உரு உடைய ராகு நச்சுக் காற்றை உமிழ்ந்தபடி சூரியனை நெருங்கி மறைக்கத் தொடங்கினான். அவனுடைய நச்சுக்காற்று சூரியனின் சுடர் முகத்தையே கருமையடையச் செய்துவிட்டது. ராகுவின் விஷக் காற்றால் தான் இழந்த சுடர் முகத்தை மீண்டும் பெற்றிட, சூரிய பகவான் இத்தலத்திற்கு வந்தான். குடமுருட்டி ஆற்றின் வடகரையில் சிவலிங்கத்தை நிறுவி ஈசனை வழிபட்டான். கடுந்தவமும் இயற்றினான். வில்வ மரத்தின் அடியில் தவமியற்றிய சூரியனின் முன்னால் ஈசன் அம்பிகையுடன் தோன்றிக் காட்சி கொடுத்தருளினான்.

அன்னை பார்வதி தேவி, மலர்ந்த முகத்துடன் தன் அருட்பார்வையை சூரியனின் மீது செலுத்தினாள்! ஈசனும் சூரியனை நோக்கினான்! சூரியனின் முகத்திலிருந்த கருமை நீங்கி அவன் மலர்ந்த திருமுகம் பெற்றான்! சூரியனின் சுடர் முகத்தை மலரச் செய்ததால், அம்பிகைக்கு, ‘பிரசன்ன பார்வதி’ என்னும் திருப் பெயர் தோன்றியது! பிரசன்னம் என்றால் மலர்தல் என்று பொருள். ராகுவின் விஷக்காற்றால் ஏற்பட்ட கொடுமையை அழித்ததால் இத்தலத்து ஈசனை, 'நஞ்சழித்த நாதன்' என்று போற்றினர். அப்பெயரே வடமொழியில், விஷஹரேஸ்வரன்.

ஆனால், இவ்வூரில் இதுவரை எவரும் பாம்பு கடித்து இறந்தது கிடையாது. இது ஓர் அதிசயம்!

ஆனால், இவ்வூரில் இதுவரை எவரும் பாம்பு கடித்து இறந்தது கிடையாது. இது ஓர் அதிசயம்!

இறைவன்-விஷஹரேஸ்வரர்
இறைவி- பிரசன்னபார்வதி
Nearby cities:
Coordinates:   10°52'41"N   79°30'48"E
This article was last modified 10 years ago