Serangulam sivan temple (Mannargudi)

India / Tamil Nadu / Mannargudi / muthupettai road
 temple, Shiva temple
 Upload a photo

மன்னார்குடியின் கிழக்கில் ஓடும் பாமணி ஆற்றின் கரையில் இரு கிமி தூரம் சென்றால் சேரங்குளம் அடையலாம் இங்கு கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது சிவாலயம்.

முகப்புமண்டபத்துடன் கூடிய கருவறை, அதில் தெற்கு நோக்கிய அம்பிகை கருவறை
கருவறை கோட்டத்தில் அகத்தியர், தென்முகன், லிங்கோத்பவர், பிரமன் துர்க்கை உள்ளனர். விநாயகர், முருகனுக்கு தெற்கிலும் வடக்கிலும் சிற்றலயங்கள் உள்ளன.

இறைவன்- சோமநாதர் , சோமன் வழிபட்ட தலம் என்பதால் வந்தது

இவ்வூரை சேர்ந்த பாஷ்யம் எனும் இயற்பெயர் கொண்ட ஆர்யா (1907- ) இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 1932-ல் இன்று சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி, 140 அடி உயரமும் 3 அடி குறுக்களவும் உள்ள கம்பத்தில் ஏறினார். அப்போது சென்னைக் கலங்கரை விளக்கில் உள்ள சுழலும் விளக்கின் வெளிச்சம் இக்கம்பத்தின் மீது பட்டது. அதுபடும் நேரத்தைக் கணக்கிட்டுத் திட்டமிட்டு, ஒளி படும்போதெல்லாம், கம்பத்தின் மறுபுறம் ஒளிந்து ஏறி யூனியன் ஜாக் என்ற பிரித்தானியரின் கொடியை இறக்கிவிட்டு அதில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவிட்டு இறங்கி ஓடி தப்பிவிட்டார்.

காலையில் இக்கொடியினைக் கண்ட கோட்டை ராணுவ வீரர்கள் பதட்டமடைந்தனர். கவர்னருக்குச் செய்தி போயிற்று. இதனைச் செய்தவரைக் கண்டுபிடிக்க போலீஸ் தலைகீழாக நின்றும் பயனில்லை. இன்று வரை அந்த செயலைச் செய்தவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் அரசாங்க ஆவணங்கள் கூறுகின்றன.

பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, இந்திய தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர் பாஷ்யம் எனும் ஆர்யா. சிறந்த ஓவியர்; சிற்பி; தற்காலத்தில் புழக்கத்தில் இருக்கும் மகாகவி பாரதியாரின் படத்தினை வரைந்தவர்.
Nearby cities:
Coordinates:   10°38'51"N   79°28'6"E
This article was last modified 9 years ago