Agaramangudi sivan temple (Agaramankudi)
India /
Tamil Nadu /
Ayyampettai /
Agaramankudi
World
/ India
/ Tamil Nadu
/ Ayyampettai
World / India / Tamil Nadu / Thanjavur
temple, Shiva temple
.தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், அகரமாங்குடி சிவன்கோயில்
அய்யம்பேட்டையின் தெற்கில் மூன்று கிமி தூரம் சென்றவுடன் புரசக்குடி உள்ளது, அதன் கிழக்கில் இரண்டு கிமி தூரம் சென்றால் அகரமாங்குடி உள்ளது. இங்கிருந்து புகழ் பெற்ற மெலட்டூர் நான்கே கிமி தான்.
அகரம் என்பது அந்தணர்களுக்கு மன்னர்மானியமாக வழங்கப்பட்ட பகுதி ஆகும். அதனால் இந்த மாங்குடி அகரமாங்குடி என அழைக்கப்படுகிறது. ஊரின் மையத்தில் பெருமாள் கோயில் ஒன்றும் வடகிழக்கில் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயிலும் உள்ளது. இன்றும் பழமைமாறாத அக்ரகார தெருக்களும் அங்குள்ள வீட்டு திண்ணைகளும் அரிசிமாக்கோலமிட்ட வாயில்களும் அதன் நடுவில் பூத்திருக்கும் பூக்களும் நம்மை ஓர் நூற்றாண்டுக்கு முன்னர் அழைத்து செல்லும். அய்யம்பேட்டை- சூலமங்கலம்- புரசகுடி- அகரமாங்குடி என செல்லலாம். இங்கு கிழக்கு நோக்கிய பெரியதொரு சிவாலயம் உள்ளது.
எதிரில் பெரிய குளமும் உள்ளது. பிரதான வாயில் தென்புறமே உள்ளது. இறைவன்- கைலாசநாதர், இறைவி- ஆனந்தவல்லி அந்தணர்களுக்கு தானமளிக்கப்பட்ட ஊர் எனபதால் அகரமாங்குடி என பெயர். இதன் வடக்கில் வடக்கு மாங்குடி உள்ளது
ஒரு கால பூஜை தான் என்பதால் காலை பூஜை முடிந்தவுடன் குருக்கள் சாப்பிட சென்றுவிட, வீடு தேடி நாம் சென்றழைக்க, உட்கார திண்ணையும், கையிலொரு காப்பியும் “சித்த இருங்கோ ஒரு வாய் அள்ளி போட்டுக்கிட்டு வந்துடுறேன்” என்ற வார்த்தைகளும் கிராமங்களில் மட்டுமே இன்னும் வாய்க்கப்பெறுகின்றன.
பெரிய கோயில் தான் கிழக்கு நோக்கிய இறைவன் தெற்கு நோக்கிய இறைவி கிழக்கில் பெரிய குளம் ஒன்றிருக்க தென் புற வாயிலே பிரதானமாக உள்ளது. கருவறைக்கு முன் இடைநாழி, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என அழகுடன் உள்ளது. இவை அனைத்தும் கூம்பு வடிவ விதானங்களை கொண்டுள்ளது.
இறைவன் கைலாச நாதர் என்பதால் நால்வர் காலம் தொட்டு இருந்திருக்கலாம். தற்போதுள்ள கோயில் கட்டுமானம் முன்னூறு ஆண்டுகளின் முன்னர் நாயக்கர் காலத்தியதாக இருக்கலாம்.
இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும் அம்பிகை ஆனந்தவல்லி தெற்கு நோக்கியும் உள்ளனர், இரு சன்னதிகளின் இடையில் கிழக்கு நோக்கியபடி சிறிய காசிவிஸ்வநாதர், அதன் அம்பிகை விசாலாட்சியையும் காணலாம். கருவறையின் தென்புறம் அர்த்த மண்டபத்தினை ஒட்டியபடி நீண்ட வாகன மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
கருவறை கோட்டத்தில் தென்முகன், மற்றும் துர்க்கை உள்ளனர். பிரகார சிற்றாலயங்களாக விநாயகர் , முருகன் – வள்ளி தெய்வானை, மற்றும் மகாலட்சுமி உள்ளனர்.
வடகிழக்கில் பைரவர் சூரிய சந்திரர்களும், நவகிரகங்களும் உள்ளன. இக்கோயில் சிறந்த திருமண பிரார்த்தனை தலமாக உள்ளது, கோயிலின் கிழக்கில் உள்ள திருக்குளத்தில் நீராடி ஈர வஸ்திரத்துடன் இறைவனை வணங்கினால் திருமண பாக்கியத்தினை அடையலாம் என கூறுகின்றனர்.
www.kmmatrimony.com/Temples/95-agaramangudi_temple.aspx
கிராம கோயில் என்பதால் முன்கூட்டியே அர்ச்சகரை தொடர்பு கொண்டு தேவையனவற்றினை வாங்கி செல்வது நலம்.
தொடர்புக்கு திரு. ஹரிகிருஷ்ணா 8428732147
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்,
அய்யம்பேட்டையின் தெற்கில் மூன்று கிமி தூரம் சென்றவுடன் புரசக்குடி உள்ளது, அதன் கிழக்கில் இரண்டு கிமி தூரம் சென்றால் அகரமாங்குடி உள்ளது. இங்கிருந்து புகழ் பெற்ற மெலட்டூர் நான்கே கிமி தான்.
அகரம் என்பது அந்தணர்களுக்கு மன்னர்மானியமாக வழங்கப்பட்ட பகுதி ஆகும். அதனால் இந்த மாங்குடி அகரமாங்குடி என அழைக்கப்படுகிறது. ஊரின் மையத்தில் பெருமாள் கோயில் ஒன்றும் வடகிழக்கில் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயிலும் உள்ளது. இன்றும் பழமைமாறாத அக்ரகார தெருக்களும் அங்குள்ள வீட்டு திண்ணைகளும் அரிசிமாக்கோலமிட்ட வாயில்களும் அதன் நடுவில் பூத்திருக்கும் பூக்களும் நம்மை ஓர் நூற்றாண்டுக்கு முன்னர் அழைத்து செல்லும். அய்யம்பேட்டை- சூலமங்கலம்- புரசகுடி- அகரமாங்குடி என செல்லலாம். இங்கு கிழக்கு நோக்கிய பெரியதொரு சிவாலயம் உள்ளது.
எதிரில் பெரிய குளமும் உள்ளது. பிரதான வாயில் தென்புறமே உள்ளது. இறைவன்- கைலாசநாதர், இறைவி- ஆனந்தவல்லி அந்தணர்களுக்கு தானமளிக்கப்பட்ட ஊர் எனபதால் அகரமாங்குடி என பெயர். இதன் வடக்கில் வடக்கு மாங்குடி உள்ளது
ஒரு கால பூஜை தான் என்பதால் காலை பூஜை முடிந்தவுடன் குருக்கள் சாப்பிட சென்றுவிட, வீடு தேடி நாம் சென்றழைக்க, உட்கார திண்ணையும், கையிலொரு காப்பியும் “சித்த இருங்கோ ஒரு வாய் அள்ளி போட்டுக்கிட்டு வந்துடுறேன்” என்ற வார்த்தைகளும் கிராமங்களில் மட்டுமே இன்னும் வாய்க்கப்பெறுகின்றன.
பெரிய கோயில் தான் கிழக்கு நோக்கிய இறைவன் தெற்கு நோக்கிய இறைவி கிழக்கில் பெரிய குளம் ஒன்றிருக்க தென் புற வாயிலே பிரதானமாக உள்ளது. கருவறைக்கு முன் இடைநாழி, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என அழகுடன் உள்ளது. இவை அனைத்தும் கூம்பு வடிவ விதானங்களை கொண்டுள்ளது.
இறைவன் கைலாச நாதர் என்பதால் நால்வர் காலம் தொட்டு இருந்திருக்கலாம். தற்போதுள்ள கோயில் கட்டுமானம் முன்னூறு ஆண்டுகளின் முன்னர் நாயக்கர் காலத்தியதாக இருக்கலாம்.
இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும் அம்பிகை ஆனந்தவல்லி தெற்கு நோக்கியும் உள்ளனர், இரு சன்னதிகளின் இடையில் கிழக்கு நோக்கியபடி சிறிய காசிவிஸ்வநாதர், அதன் அம்பிகை விசாலாட்சியையும் காணலாம். கருவறையின் தென்புறம் அர்த்த மண்டபத்தினை ஒட்டியபடி நீண்ட வாகன மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
கருவறை கோட்டத்தில் தென்முகன், மற்றும் துர்க்கை உள்ளனர். பிரகார சிற்றாலயங்களாக விநாயகர் , முருகன் – வள்ளி தெய்வானை, மற்றும் மகாலட்சுமி உள்ளனர்.
வடகிழக்கில் பைரவர் சூரிய சந்திரர்களும், நவகிரகங்களும் உள்ளன. இக்கோயில் சிறந்த திருமண பிரார்த்தனை தலமாக உள்ளது, கோயிலின் கிழக்கில் உள்ள திருக்குளத்தில் நீராடி ஈர வஸ்திரத்துடன் இறைவனை வணங்கினால் திருமண பாக்கியத்தினை அடையலாம் என கூறுகின்றனர்.
www.kmmatrimony.com/Temples/95-agaramangudi_temple.aspx
கிராம கோயில் என்பதால் முன்கூட்டியே அர்ச்சகரை தொடர்பு கொண்டு தேவையனவற்றினை வாங்கி செல்வது நலம்.
தொடர்புக்கு திரு. ஹரிகிருஷ்ணா 8428732147
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்,
Nearby cities:
Coordinates: 10°52'35"N 79°13'48"E
- sree machapureeswarar temple, pandaravadai 4 km
- sree keerthivaageeswarar temple, soolamangai 4.3 km
- sree mullaivana nAthar temple, thirukarugavur,Thirukarukavur 5 km
- sree dhayAneetheeswarar temple, thiruvadakurankaduthurai 6.3 km
- sree pAlaivanEswarar temple, thirupAlaithurai, tirupAlaithurai 7.5 km
- Keezha kapisthalam sivan temple 10 km
- sree aabathsagAyEswarar temple, thirupazhanam 11 km
- sree karkodageswarar temple, kamarasavalli 12 km
- Thiyagabrahmam Samadi and Aradhanai pandal 13 km
- sree panjanadheeswarar temple, thiruvaiyAru 14 km
- AGARAMANGUDI THANJAVUR DIST 1 km
- MAGKOLLAI 1.2 km
- BARANI RAAJYAM 2.2 km
- purasakudi village 2.3 km
- revathi land 2.6 km
- GOAT FOAM 2.6 km
- RAMANATHAN FISH FARM 2.9 km
- MURALI ANNA LAND 3 km
- S R Soundararajan Farms 4 km
- KARAMBAI 4.4 km
Comments