Sree IrAvatheeswarar Temple, PerunthOttam (Perunthottam)
| Shiva temple
India /
Tamil Nadu /
Tirumullaivasal /
Perunthottam /
mangaimadam road, 1
World
/ India
/ Tamil Nadu
/ Tirumullaivasal
World / India / Tamil Nadu / Thiruvarur
temple, Shiva temple
TVT008 atheechuram01 - Sree Athithulya kuchalAmbAL samEtha sree AirAvatheeswarar temple, perunthOttathu atheechuram is atheechwaram 8th Thevara Vaippu Temple.This one is also coming under one of the naangoor rishaba seva thevara vaippu temples (TVT187 naangoor10).SvPT10 - tenth temple of 12 Shiva Peetam Temples, this one is PRAANA peetam.SAST06 - one of the Saptha Aaranya Shiva Temples, this one is yogavanam or yoga aranyam.PT Wealth - parikAra, means curing, temple to worship for those who wants to become rich, sanganithi and padhmanithi worshipped the lord here.PT Litigation – parikara temple for getting relief from court and other kind of litigations,sree vathadum vinayagar is blessing here for that.
Location:4kms from mangaimaadam yogeeswarar temple.
சீர்காழி- மங்கைமடம் சென்று அங்கிருந்து மூன்று கிமி கிழக்கில பயணித்தால் பெருந்தோட்டம் அடையலாம்.பெருந்தோட்டத்தில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. அவற்றில் மிக பழமையானதும் வைப்பு தலம் ஆக போற்றப்படுவது ஐராவதீஸ்வரர் திருக்கோயில்.
இக்கோயில் ஊரின் கிழக்கு பகுதியில் உள்ளது இக்கோயில்.அக்காலத்தில் வணிக ரீதியில் விளைபயிர்களை உற்பத்தி செய்யுது ஏற்றுமதிசெய்யும் பகுதிக்கு பெருந்தோட்டம் என பெயர்.
இந்திரனது யானை ஒருமுறை துர்வாசரை அவமதித்ததால் அதனை காட்டு யானையாக போகும்படி சபித்தார். அந்த யானை பல தலங்களை சுற்றி வந்து இத்தலத்தில் இறைவனை வழிபாட்டு பேறு பெற்றது.அதனால் இறைவன் ஐராவதீஸ்வரர் என பெயர்பெற்று இங்கே காட்சியளிக்கிறார்.இரண்டு ஏக்கர் பரப்பளவில் கிழக்கு நோக்கிய கோயில். முகப்பு கோபுரம் இல்லை அழகிய சுதைவாயில் உள்ளது. உள்ளே பிரகாரத்தில் இடதுபுறம் மேற்கு நோக்கிய வாதாடும் விநாயகரும், தென்மேற்கில் கிழக்கு நோக்கிய ஸ்தலவினாயகரும் உள்ளனர்.அடுத்து முருகன் சிற்றாலயமும் மகாலட்சுமிகான சிற்றாலயமும் உள்ளன. கருவறை சுவற்றில் யானைமுகத்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்விப்பதையும் அருகில் சோழ மன்னனும் அவரது மனைவியும் சில அடியார்களும் உள்ளதை காணமுடிகிறது.கருவறை மேற்கில் உள்ள கோட்டத்தில் விநாயகர் இருப்பது என்ன வரலாறு என அறியமுடியவில்லை.இருப்பினும் இத்தலம் விநாயகருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இடம் என்றே அனுமானிக்கலாம்.
கல்வெட்டுக்கள் இக்கோயிலை அத்திச்வரம் என வழங்குகிறது, ஜெயங்கொண்ட சோழமண்டலத்து வெண்குன்ற கோட்டத்து அத்தீஸ்வரமுடையார்எனத்தொடங்கும் வரிகள் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. (அத்தி-யானை) உள்ளே கருவறை பழமையானதாக உள்ளது.இறைவன் கம்பீரமாக காட்சியளிக்கிறார். இருபுறமும் துவாரபாலகர்கள் அழகுடன் உள்ளன.சிறிய விநாயகரும், வலதுபுறம் சிறிய முருகன் சிலையும் உள்ளன. அம்பிகை தெற்கு நோக்குகிறார்.
இறைவன்-ஐராவதேஸ்வரர்
இறைவி- அதிதுல்யகுஜாம்பாள்
Location:4kms from mangaimaadam yogeeswarar temple.
சீர்காழி- மங்கைமடம் சென்று அங்கிருந்து மூன்று கிமி கிழக்கில பயணித்தால் பெருந்தோட்டம் அடையலாம்.பெருந்தோட்டத்தில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. அவற்றில் மிக பழமையானதும் வைப்பு தலம் ஆக போற்றப்படுவது ஐராவதீஸ்வரர் திருக்கோயில்.
இக்கோயில் ஊரின் கிழக்கு பகுதியில் உள்ளது இக்கோயில்.அக்காலத்தில் வணிக ரீதியில் விளைபயிர்களை உற்பத்தி செய்யுது ஏற்றுமதிசெய்யும் பகுதிக்கு பெருந்தோட்டம் என பெயர்.
இந்திரனது யானை ஒருமுறை துர்வாசரை அவமதித்ததால் அதனை காட்டு யானையாக போகும்படி சபித்தார். அந்த யானை பல தலங்களை சுற்றி வந்து இத்தலத்தில் இறைவனை வழிபாட்டு பேறு பெற்றது.அதனால் இறைவன் ஐராவதீஸ்வரர் என பெயர்பெற்று இங்கே காட்சியளிக்கிறார்.இரண்டு ஏக்கர் பரப்பளவில் கிழக்கு நோக்கிய கோயில். முகப்பு கோபுரம் இல்லை அழகிய சுதைவாயில் உள்ளது. உள்ளே பிரகாரத்தில் இடதுபுறம் மேற்கு நோக்கிய வாதாடும் விநாயகரும், தென்மேற்கில் கிழக்கு நோக்கிய ஸ்தலவினாயகரும் உள்ளனர்.அடுத்து முருகன் சிற்றாலயமும் மகாலட்சுமிகான சிற்றாலயமும் உள்ளன. கருவறை சுவற்றில் யானைமுகத்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்விப்பதையும் அருகில் சோழ மன்னனும் அவரது மனைவியும் சில அடியார்களும் உள்ளதை காணமுடிகிறது.கருவறை மேற்கில் உள்ள கோட்டத்தில் விநாயகர் இருப்பது என்ன வரலாறு என அறியமுடியவில்லை.இருப்பினும் இத்தலம் விநாயகருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இடம் என்றே அனுமானிக்கலாம்.
கல்வெட்டுக்கள் இக்கோயிலை அத்திச்வரம் என வழங்குகிறது, ஜெயங்கொண்ட சோழமண்டலத்து வெண்குன்ற கோட்டத்து அத்தீஸ்வரமுடையார்எனத்தொடங்கும் வரிகள் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. (அத்தி-யானை) உள்ளே கருவறை பழமையானதாக உள்ளது.இறைவன் கம்பீரமாக காட்சியளிக்கிறார். இருபுறமும் துவாரபாலகர்கள் அழகுடன் உள்ளன.சிறிய விநாயகரும், வலதுபுறம் சிறிய முருகன் சிலையும் உள்ளன. அம்பிகை தெற்கு நோக்குகிறார்.
இறைவன்-ஐராவதேஸ்வரர்
இறைவி- அதிதுல்யகுஜாம்பாள்
Nearby cities:
Coordinates: 11°11'52"N 79°49'57"E
- sree kailasanathar temple, perunthottam 0.6 km
- Sree AathiKesava Perumal temple, Perunthottam 1 km
- PERUNTHOTTAM Lakshminarayanan Perumal Koyil 1.5 km
- sree sundharEswarar temple, thirukalikAmoor, annappanpEttai, 2 km
- Sri Ugra Narasimhar Temple at Thirukkuravlur 2.2 km
- sri thayala baramasvare amman tabol 2.4 km
- sree Veera Narasimha Perumal Temple , Mangaimadam 3 km
- Shri Paramasivendra Saraswathi Swamigal's Adhishtanam 3.3 km
- Thirumullaivayil sivan temple 4.9 km
- sithi vinayakar koil 5.8 km
- AHARAPERUNTHOTTAM WARD NO 5 1 km
- Perunthottam Lake 1.6 km
- annappanpettai-thirukalikamoor 2 km
- melamoovarkarai 2.2 km
- Mathampatiinam Village 3.1 km
- Thirumullai Vaasal 4 km
- Valuthhukdi village 7.2 km
- M.Pasupathi P.Merry 7.9 km
- Well come toThoduvai 8.2 km
- thandavan kulam 13 km