திருப்பரங்குன்றம் என்னும் இயற்கை எழில் சூழ்ந்துள்ள அழகுமிக்க சிற்றூரில் முந்நூறு மீட்டர் உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் ஊ ரின் நடுவே குன்றே கோவிலாக எழுந்துள்ள எழில்மிகு திருக்கோவிலே திருப்பரங்குன்றம் திருக்கோயிலாகும்.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடாகச் சிறப்புப் பெற்று விளங்குதலால், அவன் பெயராலேயே இத்திருக்கோவில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் என்றே அழைக்கப்படுகின்றது. இத்தலம் 275 தேவாரத் தலங்களுள் ஒன்றாக, பாண்டிய நாட்டின் மதுரை மாநகரிலிருந்து தென்மேற்கில் ஐந்து கல் தொலைவில் மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுச் சாலைக் கருகிலேயே அமைந்துள்ளது. மதுரை புகைவண்டி நிலையத்திலிருந்து தெற்கே செல்லும் வழியில் பசுமலைக்கு அடுத்த நிலையமாக இவ்வூர் உள்ளது.
மதுரையில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
மதுரையிலிருந்து திருமங்கலம், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஐபாளையம் வழியாக தென்காசி செல்லும் இரயில்களும், திருநெல்வேலி, நாகர்கோயில், தூத்துக்குடி செல்லும் இரயில்களும் திருப்பரங்குன்றம் இரயில் நிலையத்தில் நின்று செல்லும்.