sree agastheeswarar temple,killiyur

India / Tamil Nadu / Peralam / Thirumeeyachchoor to Thirupampuram road
 temple, Shiva temple
 Upload a photo

பேரளம்- திருப்பாம்புரம் சாலையில் ஆலத்தூர் அடுத்து உள்ளது ஒரு சிறிய சாலை பிரிவு அதில் அரைகிமி தூரம் சென்றால் இந்த கிள்ளியூர் அடையலாம். பல கிள்ளியூர் இருப்பதால் இது 10.கிள்ளியூர் எனப்படுகிறது.

அழகிய சிறிய கிராமம், ஆற்றின் நீர் வரத்தின் காரணமாக பசுமை படர ஆரம்பித்துள்ளது, கிராமத்தின் மையத்தில் கம்பீரமாக மாடக்கோயில் போல் உயர்ந்த படிக்கட்டுகளுடன் கிழக்கு நோக்கி உள்ளது சிவாலயம். எதிரில் பெரிய சதுர வடிவ குளம்.

முகப்பு கோபுரமில்லை, விடை மேல் பெருமானின் பெரிய சுதைகள் மாடங்களில் உள்ளன. இடது புறம் வெளி வாயிலை ஒட்டி ஓர் விநாயகர் சன்னதியும் அதனை ஒட்டி ஓர் லிங்கமும் உள்ளன. கோயிலை ஒட்டிய தெருவில் ஓர் அன்னதான மடம் இருந்துள்ளது.

கோயில் முறையான பூஜை இல்லையாம். சென்றபோது கோயில் பூட்டப்பட்டு இருந்தது, யாரை கேட்பது என யோசித்த போது ஓர் பெண்மணி எனது மாமனார் தான் காவல் பார்க்கிறார் என அழைத்து வர சென்றார். அவர் வரும் வரை அருகாமை குடிசை டீக்கடையில் ஊர் நடப்பு பற்றி கேட்க, அருகாமையில் உள்ள மாரியம்மனை ஓர் பூசாரி பூஜை செய்கிறார், சிவன் கோயிலுக்கு தான் யாருமில்லை, காவலாளியே விளக்கிட்டு பூஜை செய்து வருகிறார். வாயிலிலே ஓர் கயிற்று கட்டில் அவரது சொத்தாக...

அகத்தியர் பூசித்த தலம். வாயு பூசித்த தலம்.

கிள்ளிக்குடி எனும் பெயரில் ஒரு வைப்பு தலம் இருக்கிறது, அருகாமையில் திருப்பாம்புரம் செருகுடி இருப்பதால் தேவார வைப்பு தலமாக இருக்கலாம், ஆனால் கீவளூர் அருகில் ஓர் கிள்ளுக்குடி எனும் ஊர் இதற்க்கு போட்டியாக வருகிறது.

கதவினை திறக்க, கோயில் வளாகம் பெரிதாய் உள்ளது பெரிய நந்தி ஒன்று இறைவனை நோக்கியபடி வெளி மண்டபத்தில் உள்ளது. இறைவன் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கியபடி சற்று பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கி கௌரி பார்வதி எனும் பெயரில் அருள்பாலிக்கிறார்.

கருவறை வெளி மண்டபத்தில் ஒருபுறம் விநாயகர் திருவாசியுடனும் மறுபுறம் முருகன் சக்திவேல், வஜ்ரவேல் கொண்டு சிரித்த முகத்துடன் வரவேற்கிறார் பாருங்கள்.

கருவறை உள்மண்டபத்தில் ஓர் விநாயகர் உள்ளார்.பிரகாரத்தில் நீண்ட மண்டபத்தில் விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, ஒரு லிங்கம் தனியாகவும், வாயு பூசித்த தலமாதலால் வாயு லிங்கமும் மகாலட்சுமி சன்னதியும் உள்ளன.

கருவறை கோட்டத்தில் தென்முகன் மற்றும் துர்க்கை மட்டும் உள்ளனர். வடகிழக்கில் நவகிரகம், பைரவர், சனி ஆகியோர் உள்ளனர். There is thEvAra vaippu temple in the same name killukudi(TVT088) is available near keezhvELoor on the route to kachinam.
shaivam.org/siddhanta/sp/spt_v_killikudi.htm
Nearby cities:
Coordinates:   10°57'31"N   79°37'22"E

Comments

  • this is very peace full place,i am from this village ,i am very proud of this.
  • This is is not Thirupampuram. It is a little further away to the West
  • yes u are correct cld u pls tell us what is the name of this temple and the details???
  • I need the contact number for lalitha parameshwari temple located in thirumeeyachur. Pls share with me @ manivalmeeki@gmail.com. Thanks, Manikandan Valmeekanathan
This article was last modified 6 years ago