திருமூலரால் சிவபூமி என போற்றப்பட்ட ஈழமணிதிருநாட்டின் வடக்கே நீர்வளமும்செல்வச் செழிப்பும் மிக்க கிளிநொச்சி மாவட்டத்திலே அதனுடய செளிப்பிற்கே காரணமாய் அமைந்திட்ட வடக்கின் மிக பெரிய நீர் தேக்கமான இரணைமடு நீர் தேக்கத்தினை தீர்த்தமாக கொண்டு அதனுடைய இடது கரையிலே கோவில்கொண்டு அன்னை பராசக்தி வலது கரத்திலே கிளியினை ஏந்தியபடி நின்ற திருக்கோலத்தில் கனகாம்பிகை எனும் திருநாமம் தாங்கி வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளித்து அருளாட்சிபுரிந்துவரும் திருத்தலமே இரணைமடு திருவருள் மிகு கனகாம்பிகைஅம்பாள் பெருங்கோவிலாகும்
தோற்றம்
ஈழத்து ஞானியான யோகர் சுவமிகளது அருள்வாக்கினாலும் ஆலோசனையாலும் வழிகாட்டுதலாலும் பெரியோர்கள் சிலரது முயற்சியில் அன்னைக்கு இரணைமடுகுளத்தின் இடது கரையில் ஒரு வேப்பமரத்தின் கீழ் சிறு குடிசையால் ஆலயம் அமைக்கப்பட்டது பின்னர் அன்னையின் திருவருளாலும் ஆலய பரிபாலனசபையினரது கடும் முயற்சியாலும் அடியவர்களின் பங்களிப்புடன் மூன்று குடமுளுக்குகளை கண்டு இன்று பெருங்கோவிலாகி நிற்கிறது