World / Sri Lanka / Kilinochchi, 7 km from center Coordinates: 9°20'34"N   80°26'8"E

kanakampikai amman temple


திருமூலரால் சிவபூமி என போற்றப்பட்ட ஈழமணிதிருநாட்டின் வடக்கே நீர்வளமும்செல்வச் செழிப்பும் மிக்க கிளிநொச்சி மாவட்டத்திலே அதனுடய செளிப்பிற்கே காரணமாய் அமைந்திட்ட வடக்கின் மிக பெரிய நீர் தேக்கமான இரணைமடு நீர் தேக்கத்தினை தீர்த்தமாக கொண்டு அதனுடைய இடது கரையிலே கோவில்கொண்டு அன்னை பராசக்தி வலது கரத்திலே கிளியினை ஏந்தியபடி நின்ற திருக்கோலத்தில் கனகாம்பிகை எனும் திருநாமம் தாங்கி வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளித்து அருளாட்சிபுரிந்துவரும் திருத்தலமே இரணைமடு திருவருள் மிகு கனகாம்பிகைஅம்பாள் பெருங்கோவிலாகும்

தோற்றம்

ஈழத்து ஞானியான யோகர் சுவமிகளது அருள்வாக்கினாலும் ஆலோசனையாலும் வழிகாட்டுதலாலும் பெரியோர்கள் சிலரது முயற்சியில் அன்னைக்கு இரணைமடுகுளத்தின் இடது கரையில் ஒரு வேப்பமரத்தின் கீழ் சிறு குடிசையால் ஆலயம் அமைக்கப்பட்டது பின்னர் அன்னையின் திருவருளாலும் ஆலய பரிபாலனசபையினரது கடும் முயற்சியாலும் அடியவர்களின் பங்களிப்புடன் மூன்று குடமுளுக்குகளை கண்டு இன்று பெருங்கோவிலாகி நிற்கிறது


place comments:
3 months ago Desi   +1
Near the temple two pig tree there.there are many Sippa Vakanankal
13 days ago   0
இவ்வாலயம் கிளிநொச்சியிலுள்ள புகழ்மிக்க அம்பாள் ஆலயமாகும்
இரணைமடு குளத்தினை தீர்த்தமாக கொண்டுள்ள இவ்வாலயம் யோகர் சுவாமிகளின்
அருள் வாக்கிற்கேற்ப அமைக்கப்பட்டதாகும்
இங்கு அழகிய சிற்ப வேலைகளுடன் கூடிய மூன்று சித்திரை தேர்கள் உள்ளன
add your comment in English


Edited: 13 days ago Languages: en